செர்ரி
பழங்களின் வழியே ஒரு பயணம்
தேநீர் கோப்பைகள் என் கையில்
தஞ்சம் புகும் எல்லா நேரங்களிலும் கடும் சூடாகவே இருந்திருக்கிறது . எனக்கும் சூடு தேநீர் கோப்பைக்கும் என்றும் ஆவது இல்லை. எனக்கு சூடான தேநீர்
பிடிப்பதும் இல்லை. சூடு தனிய பிரிட்ஜெக்குள்
வைத்துவிடுவேன். இப்போதும் அப்படியே வைக்கிறேன்
சூடு தனிய காத்து கொண்டிருக்கிறேன்
சொல்லப்போனால் அந்த வெப்பத்தை
என்ன நா தாங்கி கொள்ளும் பலத்தை பெறவில்லை.
சூடு, என் எதிரி. படித்திருக்கிறேன் அணு கரு இணைவு
மூலம் உருவான சூரியனினுள் வெப்பம் தகதகக்குமாம் கிட்ட தட்ட 15 கோடி டிகிரி செல்சியஸ்
இந்த தேநீர் வெறும் 180 டிகிரி செல்சியஸ் சாதாரணம்.
கலிபோர்னியா டெத் வேலியில் 1913இல் 56.4 டிகிரி பதிவானதுதான் உலகில் அதிகமாம்.
அப்போ எரிமலை குழம்பின் சூடு
.உலகின் பெரிய எரிமலை மோனா லோயயும் சரி 10
ஏப்ரல் 1815 அதிக நெருப்பு குழம்பை கக்கிய தம்போரா எரிமலை குழம்பையும் சரி நினைக்கையில்
உண்மையில் உடல் வெந்து போனது போல் தான் உணர்கிறேன். எரிமலையினாலும் விண்கற்களாலும்(விண்கற்கள்
பூமிக்குள் வரும்போது தீப்பற்றி எரிந்து கொண்டு வருமாம்) அழிந்து போன டினோசர்கள் வலி
கொடியது உலகை அளித்தது நெருப்பு இனியும் பூமி வெப்பமயம் ஆகியே அழியும் அதன் காரணம்
நாமாய் இருப்போம்.
மறுபுறம் நெருப்பு மனித நாகரிகம்
வளர காரணமாயும் இருந்திருக்கிறது. சக்கரத்துக்கு முன்பாய் மனிதன் நெருப்பை கையாள படித்தான்
அதை கட்டுப்படுத்த தொடங்கினான். சிக்கி முக்கி கல்லை உராய்ந்து நெருப்பை உருவாக்கவும்
செய்தேன். வளர்த்தான்
உலகை ஆண்டான் என்பதே உண்மை. நெருப்பு
உலகை ஆண்டது
முரணாய் நெருப்பு அழிக்கப்பட்டதால் தான் நாம் தோன்றினோம்
என்று சொல்லுகிறார்கள். வெப்பம்
தணிந்தே உலகம் பிறந்தது என்ற கோட்பாடும் உண்டு(பிக் பேங்). பெரு வெடிப்புக் கோட்பாடு!
கடும் வெப்பத்தோடு வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் மெல்ல தனித்து குளிர்ந்து திண்ணம்
அடைத்து பூமி பிறந்தது. குளிர் பூமியை உண்டாக்கியது
பிரிட்ஜ்ல் இருந்து என் தேநீர்
கோப்பையை எடுக்கிறேன். பிரிட்ஜெக்குள் இருந்த குளிர் என் மேல் மெல்ல படரும் போதே ஒரு
அமைதியை உணர்தேன். 16-19 நூற்றாண்டு வரை உள்ள காலத்தை விஞானிகள் சிறு பனிக்கட்டிக்காலம்
என்றும் கூறுகிறார்கள் முழு பனிக்காலம் வருமா என்று தெரியவில்லை ஆனால் அண்டார்டிகாவில்
இருந்து அரோரா( துருவ ஒளி) ரசிக்க வேண்டும் என்று பலநாட்கள் நினைத்து உள்ளேன். வான்
வண்ண வண்ண விளக்குகளால் மின்னுமாம் அந்த வண்ணங்களில் கரைந்து போக வேண்டும் என்றும்
நினைத்து உள்ளேன் குறைந்த பட்சம் ரஷ்யாவின் வேர்க்கஷாயன்ஸ்க் மற்றும் யகுட்ஸ்க் பகுதிக்காவது செல்ல வேண்டும்
அங்கே குளிரால் மக்கள் வாழ்க்கையே வித்தியாசமாய் இருக்குமாம். மேலும் என் எதிரி வெப்பத்தை
அளிப்பதால் குளிர் என் நண்பனே.
கை மேல் படர்ந்து இருந்த குளிர்
மறைந்திருந்தது கோப்பையோடு நடக்கிறேன். சட்டென்று கால் தடுமாற சிறுதளவு தேநீர் கிழே
சிந்துகிறது. மெல்ல கோப்பையை மேஜையின் மீது வைக்கிறேன். உள்ளே இருந்த தேநீர் கடல் அலை
போல் கொந்தளித்து அடங்கியது 2004இல் 230,000–280,000 மக்களை பலிகொண்ட சுனாமியை நினைவுப்படுத்தியது
அந்த சலசலப்பு.
உலகில் பல நாகரிகம் வெள்ளத்தால்
பிறந்ததும் அழிந்ததும் வரலாறு. சிந்து சமவெளி நாகரிகம்(ஹரப்பா) நம் தமிழர் நாகரிகம்
என்று ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வரும்பொழுது பெருமையாய் இருக்கிறது. நம் ஜல்லிக்கட்டு
காளை பொறித்த சின்னத்தை பார்த்த பொது சிலிர்த்தது அத்தகைய நாகரிகத்தை அள்ளிசென்றதில்
ஒரு காரணம் நீர். சிந்து நதி. கடலுக்குள் மூழ்கிய குமரிக்கண்டம் சென்று நீரை பிளந்து
நம் தமிழர் பெருமை வெளிகொண்டுவரவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த தொல்காப்பியத்தின்
மீதியை படிக்கவேண்டும்.
நீரால் அழிந்த நாகரிகங்கள் பல
நீர் இல்லாமல் அழிய போகிறவர்கள் நாம் என்று நன்றாய் தெரியும். மூன்றாம் உலக போர் நீரால்
வரும். நீரால் உலக அழிவும் வரும் அது நம்மால்.
ஆனால் உலகம் அழியும் நொடியில்
நாம் நம்மை காக்க மறந்து பிறரை காக்க முயலும் கணம் இருந்தால் மட்டுமே நாம் இவ்வள்ளவு
காலம் இந்த பூமியில் வாழ்ந்தது முழுமை பெரும்.
ஒரு படைப்பு, பனியில் புதைத்து
வைக்க பட்ட செர்ரி பழம் இன்னும் அதன் அர்த்தம் விளங்க வில்லை எனக்கு. அதே போல் இந்த
கட்டுரையின் தலைப்பு ஏன் செர்ரி பழங்களின் வழியே ஒரு பயணம் என்று புரியாமல் இருக்கலாம்.
புரிய முற்படும் போதே பயணம் அழகாய் இருக்கும். கையில் இருந்த ஒரு கோப்பை தேநீர் தீர்ந்து
இருந்தது

No comments:
Post a Comment